வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

2018-12-30

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்தால் தமது உணவு, உடை, உறையுள் என்பவற்றை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் உறவுகளுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கோள்ளும் முகமாக மட்டக்களப்பு மாநகர சபையுடன், மாவட்ட செயலகமும், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கமும், மாவட்ட இளைஞர்களும், ஏனைய அரச, அரச சார்பற்ற அமைப்புகளும் இணைந்து சேகரித்த நிவாரணப் பொதிகள் இன்று (29.12.2018) வழங்கி வைக்கப்பட்டன.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பொதிகள் இன்று அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடமும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொதிகள் ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் ராம்தாஸ் ரமேஷ் அவர்களிடமும் கௌரவ மாநகர முதல்வர் தலைமையிலான குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டன.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks