மாநகர சபையின் 12ஆவது அமர்வு

2018-12-08

மட்டக்களப்பு மாநகர சபையின் 12ஆவது பொது அமர்வானது நேற்றைய தினம் (06.12.2018) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர், மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநகரசபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தற்போது இவ்வருடத்தின் இறுதி மாதம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பிலும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பிலும் முதல்வர் தனது தலைமை உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் நிதிக்குழு மற்றும் சுகாதாரக் குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

www.bahiskralligi.com

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks