பருத்தித்துறை நகரபிதா தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்.

2018-11-19

பருத்தித்துறை நகரபிதாவின் தலைமையிலான குழுவினர் இன்று (19.11.2018) மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

பருத்தித்துறை நகரசபையின் நகரபிதா ஜோசெப் இருதயராஜா தலைமையில், பிரதி நகரபிதா மற்றும் நகரசபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்த விஜயத்தை மேற்கொண்டதுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற மரநடுகை திட்டங்கள் தொடர்பாகவும், பசுமை காக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் அனுபவங்களையும், செயன்முறைகளையும் அறிந்துகொள்ளும் நோக்கில் இவ்விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த விஜயத்தினை மேற்கொண்டிருந்த குழுவினர், மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலும், மாநகர சபையினால் மரம் நடுகை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் இடம்பெற்ற முன்னிலைப்படுத்தல் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks