நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா

2018-10-30

மட்டக்களப்பு மாநகரசபையின் வாணி விழாவானது இன்று (18.10.2018) வியாழக்கிழமை மாநகரசபையின் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில் நடைபெற்றது.

இவ் வாணிவிழா நிகழ்வில் சுத்தானந்தா பாலர் பாடசாலை மாணவிகளான செல்வி ஜெயரத்ஷா, செல்வி றித்திக்கா, இசை நடனக் கல்லூரியின் விரிவுரையாளர் செல்வி அனுஜா வேதநாயகம் ஆகியோரின் நடனமும், புனித சிசிலியா பெண்கள் உயார்தரப் பாடசாலை மாணவிகளின் குழு நடனமும் இடம்பெற்றது.

நிகழ்வின் சிறப்பம்சமாக ஓய்வு பெற்ற அதிபர் திரு.கமலநாதன் அவர்களின் ஆண்மீகச் சொற்பொழிவும் இடம்பெற்றது.

அத்துடன் நிகழ்களில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களும், அவர்களை பயிற்றுவித்த ஆசியர்களும் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோரால் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் மாநகர முதல்வார் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், மாநகரசபையின் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks