4 பேர்ச்சஸ் காணியிலும் கட்டிடங்கள் அமைக்கலாம் - மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

2018-09-11

இதுவரையில், மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் கட்டிடங்கள் அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 6 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணி இருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டினை திருத்த வேண்டும் எனக் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 9ஆவது அமர்வு கடந்த வியாழக்கிழமை மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர எல்லைக்குள் கட்டிடங்கள் அமைப்பதற்கு ஆகக்குறைந்தது 6 பேர்ச்சஸ் விஸ்தீரணம் கொண்ட காணி இருக்க வேண்டும் ஆனால் தற்காலத்தின் சனநெரிசல், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் பொருளாதார, சமூக நலனைக் கருத்தி;ற்கொண்டு கட்டிடம் கட்டுவதற்காக அனுமதிக்கப்படும் ஆகக்குறைந்த காணி விஸ்தீரனத்தினை 4 பேர்ச்சஸ் ஆக மாற்றியமைப்பதற்காக மாநகர முதல்வாரால் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நகருக்குள் இடப்பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதால் தம்மிடமுள்ள காணிகளின் விஸ்தீரணத்துக்குள் கட்டிடங்களை அமைக்க முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் சிலர் முதல்வருக்கும், மாநகரசபைக்கும் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க இந்தத் தீர்மானமானது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமாணி வெளியிடப்பட்டதும் மாநகர எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks