கதை சொல்லும் நிகழ்வு

2022-10-17

தேசிய வாசிப்பு மாதம் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையுடன் பொது நூலகமும் இணைந்து நடாத்தும் கதை சொல்லும் நிகழ்வும் சிறுவர் படக்காட்சியும் நேற்று மாலை (09) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது.

மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுநூலக உத்தியோகத்தர்கள், மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள் , சிறுவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் திரு. து.நகுலேஸ்வரன் , ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் ஆகியோர் கதைசொல்லும் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் நிகழ்வில் , சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதைகள் பலவும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks