மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மா.தயாபரன் அவர்கள் கடமையினை பொறுப்பேற்றார்.

2020-12-07

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக கௌரவ கிழக்கு மாகாண ஆளுநரால் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட திரு.மா.தயாபரன் அவர்கள் இன்று (07) திகதி திங்கட்கிழமை தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

கிராம மட்ட பொது அமைப்புக்களின் அமோக வரவேற்புடன் பட்டாசு கொழுத்தி ஆரவாரத்துடன் அழைத்து வரப்பட்ட ஆணையாளரை மாநகர சபையின் கௌரவ பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் தமைமையிலான குழுவினர் மலர் மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.

அதன் பின்னர் பின்னர் புதிய ஆணையாளர் மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், பயன் தரும் மரக்கன்றினையும் நட்டு வைத்ததோடு, சுபவேளையில் கையொப்பமிட்டு தனது கடமைகளையும் உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக்கொண்டார்.

இதன் போது புதிதாக கடமையேற்ற ஆணையாளரை மாநகர சபையின் கௌரவ முதல்வர் தியாகராசா சரவணபவன், கௌரவ பிரதி முதல்வர், பிரதி ஆணையாளர், அவரது குடும்பத்தார், மாநகர சபை உத்தியோகத்தர்களென பெருமளவானார் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks