சிறுவர்நேய மாநகர கட்டமைப்பின் கீழ் மாநகர சபையினால் சுகாதார பாதுகாப்பு முன் ஏற்பாடுகள்

2020-05-14

இலங்கை அரசாங்கமானது மக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கையையும், நிறுவனங்களின் செயற்பாடுகளையும் கடந்த மே 11ஆம் திகதி (திங்கள்) முதல் வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இதனை அடுத்து மட்டக்களப்பு மாநகர சபையினால் பொதுமக்களினதும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்களினதும் சுகாதார நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன்படி சிறுவர்நேய மாநகர கட்டமைப்பின் கீழ் செரி (CERI) மற்றும் யுனிசெப் நிறுவனங்களின் நிதிப் பங்களிப்புடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் அதன் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் முதற்கட்டமாக இன்று (14) மட்டக்களப்பு மாநகர சபையின் முகப்பு வாயிலில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கை கழுவுவதற்கான ஏற்பாடுகளும், தொற்று நீக்கும் செயற்பாடுகளும் உத்தியோகபூர்வமாக பொதுமக்களினதும், பணியாளர்களினதும் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையார் உ.சிவராஜா, சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபையின் உறுப்பினர்கள் உட்பட செரி (CERI) நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks