மட்டக்களப்பு மாநகர சபையில் வாணி விழா நிகழ்வுகள்

2019-10-07

நவராத்திரி விழாக்காலம் என்பதால் நாடெங்கும் வாணி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் வாணி விழா நிகழ்வு இன்று (07) மாநகர சபை ஆணையாளர் .க.சித்திரவேல் தலைமையில் அனுட்டிக்கப்பட்டது.

பஜனை நிகழ்வுகள், தேவார பாராயணம், சொற்பொழிவு, தீபாராதனை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. சொற்பொழிவினை ஓய்வு பெற்ற அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்கள் ஆற்றினார்.

நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks